Thursday, April 15, 2010

விமான பயணம்

கர்ப்ப காலத்தில் விமானத்தில் பயணம் செய்வதை பற்றிய குழப்பம் பலர் மனத்திலும் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.

விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள கர்பிணிகள் முடிந்தவரை 14-28 வாரங்களை தேர்வு செய்வது நல்லது. 36 வாரங்கள் வரை விமான பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு மேல் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கபடுவீர்கள். எவ்வாறாயினும் முதலில் உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி ஆலோசனை மேற்கொள்வது முக்கியம். உங்கள் கர்ப்பம் சிக்கல் இல்லாதது ஆயின் 14-36 வாரங்கள் வரை விமான பயன் மேற்கொள்வதில் சிக்கல் வராது. மீளும் கவனமாக இருக்க விரும்ம்புவோர் 14-32 வாரங்களுக்குள் உங்கள் பயணங்களை வைத்து கொள்ளலாம்.

பலருக்கு உள்ள இன்னொரு சந்தேகம் விமான நிலையத்தில் உள்ள scanner/metal detector வழியாக போனால் கரு பதிக்கபடுமா என்பது தான்.
விமான நிலையத்தில் உள்ள scanner/metal detector வழியாக போவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. X-ரே தான் குழந்தைக்கு பதிப்பு உண்டாக்கும். scanner/metal detector-இல் X-ரே கதிர் வீச்சு இருக்காது. நம் பெட்டிகளை சோதனை செய்யும் கருவியில் தான் X-ரே கதிர் வீச்சு இருக்கும். எனவே பயம் கொள்ள வேண்டாம்.

இப்பொழுது இரண்டாம் நிலை சோதனைக்காக உபயோகிக்கப்படும் backscatter X-ray system சிறிதளவு(மிக மிக குறைந்த அளவில்) X-ரே கதிர் வீச்சு கொண்டது எனினும் அது கர்பிணிகளுக்கு பாதிப்பில்லை என சொல்ல படுகிறது. மேலும் இது இரண்டாம் நிலை சோதனைக்காகவே உபயோக படுகிறது. அதாவது சந்தேக படும்படியான நபர்கள் மேல் மட்டுமே செயய படும். சில சமயம் இரண்டாம் நலை சோதனை random ஆக செய்யப்படும். முதல் நிலை சோதனை என்பது metal detector மூலமே செய்ய படுகிறது. அப்படியே உங்களை இரண்டாம் நிலை சோதனைக்கு வர சொன்னால், நீங்கள் கர்ப்பமாக இருப்பத சுட்டி காட்டி backscatter-கு பதில் full pat-test செய்ய சொல்லி கோரிக்கை வைக்கலாம்.

5 comments:

நாஸியா said...

Thank you sister...

Info on scanner is very helpful

Thaai said...

Thanks fr the commment Nasia...:)

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல முயற்சி தொடர வாழ்த்துகள். "தாய்மை... ஒரு இனிய பயணம்" தலைப்பை தமிழில் தந்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன்
தோழன் மபா

Thaai said...

Dear Maba, thanks a lot for the suggestion & wishes... have made the req changes...:)

Please keep checking the blog...:)

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றி !!

எனது வேண்டுதலை ஏற்று தமிழில் தலைப்பு தந்ததால் 'தாய்மையின் பூரிப்பு' எனக்குள்ளும் அரும்பியது.

அன்புடன்
தோழன் மபா