Thursday, July 23, 2009

பத்தொன்பதாவது வாரம் (week 19)

குழந்தையின் கண் மற்றும் இமைகள் இப்பொழுது நல்ல வளர்ச்சி இருக்கும். எனினும் இமைகள் குழந்தை பிறக்கும் வரை மூடிய நிலையிலேயே இருக்கும். 24-25 வாரங்களில் குழந்தை பிறந்தாலும் கூட இமைகள் திறந்துகொள்ளும். குழந்தை இப்பொழுது நன்றாக எடை கூட ஆரம்பித்திருக்கும். இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 12 cms இருக்கும். முழு நீளம் 23 cms இருக்கும். எடை சுமார் 250 gms இருக்கும்

இப்பொழுது நீங்கள் நன்றாக எடை கூட ஆரம்பித்திருபீர்கள். எனவே இப்பொழுது நீங்கள் உங்கள் உடலுக்கு தக்கவாறான உடைகள் வாங்க வேண்டி வரலாம். கர்ப்ப காலத்தில் உபயோகிப்பதற்கென்றே பிரத்யோக ஆடைகள் கடைகளில் கிடைக்கும். அவை மிகவும் சவ்கரியமாக இருக்கும். சல்வார் போன்ற உடைகளை விரும்புவோர் சற்று பெரிய அளவில் தைத்து கொள்ளலாம். அவ்வாறு தைபவர்கள் முன் பக்கம் ஹூக் வைத்து front open டைப் தைத்தால் குழந்தை பிறந்த பின் பாலுட்டவும் வசதியாக இருக்கும்.

கற்ப காலத்தில் பிரா அளவு 2-3 சைஸ் வரை கூடும். எனவே அதற்க்கு தக்கவாறு சரியான அளவு வாங்கி உபயோகிப்பது மிகவும் முக்கியம். இறுக்கமான உள்ளாடை அணிய கூடாது. தளர்த்தியான உள்ளாடை அணிந்தால் மார்பகங்கள் தொங்கி போகும். சரியான அளவு உள்ளாடை இப்போதிருந்து அணிந்து வந்தால் மார்பகங்கள் தொய்வடைந்து போகும் அளவு குறையும். ஆனால் எப்படி இருந்தாலும் கர்பத்துக்கு பின் மார்பகங்கள் முன் போல் இல்லாமல் சற்று தொய்வடைவது தவிர்க்க முடியாது. பாலுட்டுவதால் மார்பகங்கள் தொய்வடையும் என்று சொல்வது தவறான கருத்து. அது கற்ப காலத்தில் பால் சுரப்பிகள் செயல்பட தொடங்கி விரிவடைவதால் ஏற்படுவது. நீங்கள் குழந்தைக்கு பால் ஊட்டினாலும் இல்லை என்றாலும் குழந்தை பிறபிர்க்கு முன்பே அவை விரிவடைந்து இருக்கும். எனவே மார்பகங்கள் சற்று தொய்வடைவது தவிர்க்க இயலாதது. பால் ஊட்டுபவரானால் குழந்தை பால் மறந்த பின் மார்பகங்கள் மிகவும் தளர்ந்தது போல் காணப்படும். சுமார் 6 மாதங்களில் மார்பகங்களில் மீண்டும் கொழுப்பு சேர்ந்து அவை ஒரளவு சரி ஆகும்.

No comments: