Sunday, January 17, 2010

வளைகாப்பு / பூ சூட்டல்

ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimesterஇல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது.

குழந்தை
உருவான ஏழாவது மாதத்தில் வளைகாப்பு/பூ சூட்டல் விழா தென் இந்தியர்களால் கொண்டாடபடுகிறது. அப்பொழுது தாயிற்கு கை நிறைய கண்ணாடி வளையல் இட்டு, வாசனை பூக்கள் சூடியும் மகிழ்வர். அவ்வாறு அணிவிக்கப்பட்டு வளையல்கள் குழந்தை பிறப்பு வரை அணியுமாறு அறிவுறுத்துவார். அதற்க்கு அறிவியல்ரீதியான காரணம் உண்டு. தாயின் கையில் உள்ள கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி குழந்தை பிறப்பு வரை கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் உலா வரலாமே தோழிகளே!!!

No comments: